தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சிதம்பரனார் பகுதியை சேர்ந்த  வேதநாயகம் என்பவரின் மனைவி மூக்கம்மாள் (70), இவர் கடந்த 5-ம் தேதி  சிதம்பரநகர் பகுதியில் இருந்து காட்டுப்பகுதி வழியாக விளாத்திகுளம் அருகே மேட்டுப்பட்டி கிராமத்திற்கு சென்று தனது மகள் வீட்டிற்கு சென்றவர், வீடு திரும்பாத நிலையில் குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்த நிலையில்,07-05-2024 செவ்வாய்க்கிழமை மாலை மேட்டுப்பட்டி அருகே வைப்பாற்று பகுதியில் உடல் அழுகிய நிலையில் உயிரிழந்த நிலையில் கிடந்தார், இதனை அடுத்து உடலை கைப்பற்றிய விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.