விளாத்திகுளம் அருகே உள்ள எட்டையாபுரம்  பெரிய தெப்பக்குளத்தை விளாத்திகுளம் MLA மார்கண்டேயன் ஆய்வு செய்தார். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள எட்டையாபுரம் பேரூராட்சிக்குட்பட்ட வடக்கு ரத வீதியில் முழுவதுமாக நிரம்பியுள்ள பெரிய தெப்பக்குளத்தை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.ஆய்வில் தெப்பக்குளத்தை சுற்றிலும் மரக்கன்றுகள் நடுவதற்கும்,நீர் செல்லும் பாதையினை சுத்தப்படுத்துவதற்கும் துறை சார்ந்த அதிகாரிகளிடம் ஆலோசனை வழங்கினார். நிகழ்வில் எட்டயபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் சுப்பிரமணியன் கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீதகண்ணன் எட்டையாபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி சங்கரநாராயணன், இமானுவேல்உட்பட கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.