தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சூரங்குடி கிராமத்தில் தைப்பொங்கல் விழாவை முன்னிட்டு தேவேந்திர குல வேளாளர் சமுதாயம் சார்பாக நடைபெற்ற மாபெரும் கபடி போட்டியினை, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் விளையாட்டு வீரர்களுக்கு கை கொடுத்து உற்சாகப்படுத்தி போட்டியை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் விளாத்திகுளம் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரி முத்து, திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் இமானுவேல், வேம்பார் ஊராட்சி மன்ற தலைவர் ஆரோக்கியராஜ் மற்றும் கிராம பொதுமக்கள் என ஏராளமானோர் உடன் இருந்தனர்.