தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் பேரூராட்சி 13வது வார்டில் ரூபாய் 4, லட்சத்து 80 ஆயிரம் மதிப்பீட்டில்  25 KVA திறன் கொண்ட கூடுதல் மின்மாற்றியை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் மக்களின் பயன்பாட்டிற்காக துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் செயற்பொறியாளர் காளிமுத்து உதவி செயற்பொறியாளர் தங்கராஜ், எட்டையாபுரம் பேரூராட்சி மன்றத் தலைவர்  ராமலட்சுமி சங்கரநாராயணன், கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய திமுக ஒன்றிய செயலாளர் நவநீதக்கண்ணன், இளைஞரணி துணை அமைப்பாளர் இமானுவேல், விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் மற்றும் கிராம பொதுமக்கள் என ஏராளமானோர் உடன் இருந்தனர்.