பட்டிதேவன்பட்டி கிராமத்தில் புதிய கலையரங்கத்தினை விளாத்திகுளம் எம்எல்ஏ மார்க்கண்டேயன் திறந்து வைத்தார். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள பட்டிதேவன்பட்டி கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூபாய் 7 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய கலையரங்கத்தினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் ரிப்பன் வெட்டி மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார், இந்நிகழ்வில் ஊராட்சி மன்றதலைவர் முத்துக்குமார், ஒன்றிய செயலாளர்கள் மும்மூர்த்தி, ராதாகிருஷ்ணன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சசிகுமார்,வெங்கடாசலம், இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல் கிராம பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.