விளாத்திகுளம் சிதம்பரம் நகர் பகுதி பொதுமக்கள் மயான பாதை அமைத்துத் தர விளாத்திகுளம் எம் எல் ஏ விடம் கோரிக்கை! தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேரூராட்சிக்குட்பட்ட 12 வது சிதம்பரம் நகர் பொதுமக்கள் ,தங்கள் பகுதி மயானத்திற்கு  செல்வதற்கு சாலை வசதி இல்லாததால் மழைக்காலங்களில் பெரியதளவில் சிரமங்களை சந்தித்து வருவதாக கூறி விளாத்திகுளம் சட்டமன்ற அலுவலகத்தில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனை சந்தித்து காலையில் கோரிக்கை வைத்தனர். இதனைத் தொடர்ந்து விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன்.  விளாத்திகுளம் சிதம்பரம் நகர்  மயான பாதையை பார்வையிட்டு  ஆய்வு செய்து, மயான பாதையில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றி தற்காலிக பாதை அமைக்க நடவடிக்கை எடுப்பதாக பொதுமக்களிடம் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் உறுதியளித்தார்.