WALKATHON நடைபயிற்ச்சியில் வெற்றி பெற்றவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கிய விளாத்திகுளம் எம்.எல்.ஏ!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஸ்ரீ அம்பாள் வித்யாலயா பள்ளி மைதானத்தில் மரங்கள் மக்கள் இயக்கத்தின் சார்பாக இன்றைய தினம் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, நடைபெற்ற WALKATHON நடைபயிற்ச்சியில் வெற்றி பெற்றவர்களுக்கு நினைவுப் பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர்,சட்டமன்ற சட்ட விதிகள் ஆய்வுக் குழு தலைவர்,தலைமை செயற்குழு உறுப்பினர் மார்கண்டேயன் வழங்கி வாழ்த்தினார்.