விளாத்திகுளம் அருகே கீழ அருணாசலாபுரம் கிராமத்தில்  ரூபாய் 28 லட்சத்தி 40 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய வகுப்பறைகளை ஒன்றிய செயலாளர் செல்வராஜ் திறந்து வைத்தார். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கீழ அருணாசலபுரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் குழந்தை நேயப்பள்ளி   உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூபாய் 28 லட்சத்தி 40 ஆயிரம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள இரண்டு வகுப்பறைகளை புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார், இந்நிகழ்வில்  வட்டார கல்வி அலுவலர் ராமசுப்பிரமணியன், மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி தகவல் தொழில்நுட்பஅணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் மற்றும்  கிராம பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.