தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மேல சண்முகபுரம் ஊராட்சி வடக்குச்செவல் கிராமத்தில் புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டித்தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். அதனை ஏற்று விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியப் பெருந்தலைவர் முனியசக்தி இராமச்சந்திரன், ஒன்றியப் பொது நிதியிலிருந்து ரூ.20 லட்சம் ஒதுக்கீடு செய்து வடக்குச்செவல் கிராமத்தில் புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்ட உத்தரவிட்டதன் பேரில் அதற்கான ஒப்பந்தப்பணிகள் நடைபெற்று இன்று புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டுவதற்கு யூனியன் சேர்மன் முனியசக்தி இராமச்சந்திரன் தலைமையில் பூமி பூஜை நடைபெறுகிறது. இதில் மேல சண்முகபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் சித்திரை வேல், வட்டார வளர்ச்சி அலுவலர், ஒப்பந்தக்காரர், கிராம பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.