தூத்துக்குடி மாவட்டம்விளாத்திகுளம் அருகே உள்ள கீழ்நாட்டுக்குறிச்சி ஊராட்சிக்குட்பட்டது சக்கிலிபட்டி கிராமம். இக்கிராமத்தில் ஊர் முகப்பு பகுதியில் மக்களின் அன்றாட தேவைகளுக்கு பயன்படுத்தும் வகையில் அடிபம்பு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கால்நடைகள் பயன்பெறும் வகையில் அடிபம்பு அருகில் நீர் தொட்டியும் ஒன்றுள்ளது. இந்த அடிபம்பு பொதுமக்கள் மற்றும் கால்நடைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்து வருகிறது.
இந்நிலையில் இந்த அடிபம்பு அருகே குடிநீர் தேவைகளுக்காக நீர் நீர் தேக்க தொட்டி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிக்காக அடிபம்பு அருகே பெரிய குழி தோண்டப்பட்டுள்ளது. மேலும் அதில் தோண்டிய மண்ணை வெளியே கொண்டு போய் போடமால் அடிபம்பு மீது போட்டு மூடியுள்ளனர்.. அடிபம்பின் கைப்பிடி மட்டுமே வெளியே தெரிகிறது.
இதனால் பொதுமக்கள் அடிபம்பினை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குடிநீர் அருந்த முடியமால் கால்நடைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.. எனவே அடிபம்பு மீது போட்டுள்ள மண்ணை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
Vilathikulam
அடிபம்பின் பரிதாப நிலை - அவதியுறும் பொதுமக்கள் மற்றும் கால்நடைகள்.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு இலவச கண் சிகிச்சை முகாம் !
அடுத்த
கோவில்பட்டியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்க வேண்டும்!
இதையும் படிக்கலாம்
வேப்பமுத்து எடுக்கசென்ற மூதாட்டி பரிதாபமாக உயிரிழப்பு.
22 Jul 2026
எத்தனை நாள் நாட்கள் உள்ளே இருக்கிறானோ அவ்வளவு சீக்கிரம் திமுக ஆட்சிக்கு வரும் விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் பேச்சு!
22 Jul 2026
மதிமுகவில் தொடங்கி திமுக வரை நடந்தது என்ன?
22 Jul 2026
தனி அரசாங்கம் நடத்தும் பேரூராட்சி நிர்வாகத்தின் தொடர் கூட்டுக்கொள்ளை!
21 Jul 2026