தமிழக முழுவதும் தைப்பொங்கல் விழாவை முன்னிட்டு அதிகாலையில் எழுந்து  வீட்டின் முன்பு வண்ணக் கோலங்கள் இட்டு, சூரிய பகவானுக்கு கரும்பு மற்றும் காய்கறி வைத்து மண்பானையில் பொங்கல் வைத்து இயற்கை தெய்வத்தை வழிபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே எட்டயபுரம் காவல் நிலையத்தில் எட்டயபுரம் காவல் நிலைய ஆய்வாளர் ஜின்னா பீர் முகமது ஏற்பாட்டில், கோவில்பட்டி டிஎஸ்பி வெங்கடேஷ் தலைமையில் தைப்பொங்கலை முன்னிட்டு தமிழ் பாரம்பரிய முறைப்படி  ஆண் காவலர்கள் வேஷ்டி சட்டையும் பெண் காவலர்கள் புடவை அணிந்தும், எட்டயபுரம் காவல் நிலையம் முன்பு வண்ணக்கோலம் இட்டு, காவல் நிலைய வளாகத்தில் உள்ள விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் செய்து,கரும்புகளுடன் அனைவரும் ஒன்று கூடி பொங்கல் வைத்தது, ஒருவருக்கொருவர் இனிப்புகளை பரிமாறிக் கொண்டு பொங்கல் வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர்.