விளாத்திகுளம் அருகே 25 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து  தத்தளித்து உயிருக்கு போராடிய ஆண் மயிலை தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்டனர்!  தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கே.துரைச்சாமிபுரம் கிராமத்தில் உள்ள 25 அடி ஆழமுள்ள  பொது கிணற்றில் 5 வயது மதிக்க  ஆண் மயில் ஒன்று  விழுந்து  உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதை பார்த்த கிராம மக்கள் விளாத்திகுளம் தீயணைப்புத் துறையின் இருக்க தகவல் தெரிவித்தனர்,இதனை அடுத்து விளாத்திகுளம் தீயணைப்புத்துறை நிலை அலுவலர் ராஜேந்திரன் தலைமையிலான தீயணைப்பு மற்றும் மீட்பு பணி வீரர்கள் மீட்பு உபகரணங்களைக் கொண்டு துரிதமாக மயிலை உயிருடன் மீட்டனர், பத்திரமாக மீட்கப்பட்ட மயிலை  தீயணைப்புத்துறை வீரர்கள்  விளாத்திகுளம் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர் , அதன்பின் நாகலாபுரம் கால்நடை மருத்துவர் மனையில் மயிலுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின் வனப்பகுதியில் மயில் பத்திரமாக விடப்பட்டது.