தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வாதலக்கரை கிராம கண்மாய்க்கரை ஆலமரத்தில் கொடிய விஷ வண்டு கூடுகட்டி மக்களை கடித்து துன்புறுத்தி வந்துள்ளது.இதனை அடுத்து வாதலக்கரை ஊராட்சி மன்ற தலைவர் விளாத்திகுளம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.இதனை அடுத்து விளாத்திகுளம் தீயணைப்பு மற்றும் மீட்பு படை நிலைய அலுவலர் ராஜேந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பு உடை அணிந்து  விஷ வண்டு கூட்டினை மருந்து தெளித்து முற்றிலுமாக அகற்றினர்.