தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள  நாகலாபுரம் தேனம்மாள் முதியோர் இல்லத்தில், விஷ வண்டு கூடு கட்டி அங்குள்ள முதியோர்களை  அச்சுறுத்தி வந்தது, இது குறித்து முதியோர் இல்ல நிர்வாகத்தினர், விளாத்திகுளம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையத்திற்கு  தகவல் தெரிவித்தனர், தகவலின் பேரில்   நிலைய அலுவலர் ராஜேந்திரன் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி வீரர்கள் உபகரணங்கள் மற்றும்  தீப்பந்தங்கள் மூலம் விஷ வண்டு கூட்டினை பாதுகாப்பாக அகற்றினார்.