தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம்-சுப்பிரமணியபுரம் முதல் தெருவை சேர்ந்த அன்பழகன் என்பவரின் வீட்டில் உள்ள கோழி கூட்டுக்குள்  5 அடி நீளம் கொண்ட நல்ல பாம்பு ஒன்று இருப்பதாக அன்பழகன்(47) விளாத்திகுளம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து விளாத்திகுளம் தீயணைப்பு நிலைய அலுவலர்  ராஜேந்திரன் தலைமையிலான தீயணைப்பு மற்றும் பணி வீரர்கள்,கோழி கூட்டுக்குள் இருந்த 5 அடி நிலம் கொண்ட நல்ல பாம்பை மீட்பு உபகரணங்களைக் கொண்டு உயிருடன் லாபகமாக பிடித்து வனப்பகுதியில் விட்டனர். இதனால் சுப்பிரமணியபுரத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.