தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள குளத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட பனையூர்  கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய 15 வது பொது நிதியிலிருந்து,ரூபாய் 8 லட்சத்து 23 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியை ஒன்றிய குழு பெருந்தலைவர் முனியசக்தி ராமச்சந்திரன் பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் ஊராட்சி மன்ற தலைவர்  மாலதி செல்ல பாண்டியன் , துணைதலைவர் மாரிச்செல்வி பாலமுருகன்  மற்றும் கிராம மக்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்.