விளாத்திகுளம் அருகே கடல்குடி, துரைச்சாமிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வேளாண்மை உதவி இயக்குனர் மக்காச்சோள பயிர்களை ஆய்வு செய்தார். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள புதூர் வட்டாரத்தில் இந்த ஆண்டு சுமார் 4 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டுள்ளது, பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோள பயிர்களில் சில பகுதிகளில் பரவலாக படைப்புகளுக்கு காணப்படுகிறது, இதனை அடுத்து  படைப்புழு பாதிக்கப்பட்ட காடல்குடி, துரைச்சாமிபுரம், மேலக்கல்லூரணி, கோவில்குமரட்டையாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோள விளைநிலங்களில் புதூர் வேளாண்மை உதவி இயக்குனர்  சின்ன கண்ணு தலைமையிலான வேளாண்மை துறையினர்  மக்காச்சோள பயிர்களை ஆய்வு செய்து, விவசாயிகளிடம் படைப்புழுகள் தாக்கப்பட்ட   பயிர்களில் மருந்துகள் தெளிப்பது மற்றும் படைப்புழுவுகளை கட்டுப்படுத்துவது உள்ளிட்ட ஆலோசனைகளை அப்பகுதி  விவசாயிகளுக்கு புதூர் வேளாண்மை துறை அதிகாரிகள் வழங்கினர்.