தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச சிலம்பப் போட்டியில், மலேசியா சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து ஏராளமான மாணவ மாணவிகள் சிலம்ப போட்டியில் கலந்து கொண்டனர், இதில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த 6-ம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவி இலநங்கை தாரகை முதலிடம் பிடித்தார்,அதோடு சிலம்பம் தொடும் முறையில் பிரிவில் கோவில்பட்டி கல்லூரி மாணவன் பூவரசன் முதலிடம் பிடித்தார், இதனை அடுத்து சிலம்பப் போட்டியில் முதலிடம் பிடித்த மாணவ, மாணவிகள் இருவரும் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனை விளாத்திகுளம் அம்பாள் நகரில் உள்ள இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர், வாழ்த்து பெற்ற மாணவ,மாணவிகளுக்கு சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டையன் வாழ்த்து தெரிவித்து ஊக்கத்தொகை வழங்கினார்.