முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்டத்தில் ரூபாய் 150 கோடி செலவில் பல்வேறு சாலை பணிகள் நடைபெற்று வருகின்றன. நடைபெற்று வரும் சாலை பணிகளை ஆய்வு செய்திட, சென்னையில் இருந்து மாநிலத் தரக்கட்டுப்பாட்டு அதிகாரி எஸ்வி நாகப்பன் மாவட்டம் முழுவதும் நடைபெற்று வரும் பல்வேறு சாலைகள் மற்றும் பாலங்கள் பணிகளை ஆய்வு செய்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சக்கிலிபட்டி மயானச்சாலை  மற்றும் மேலக்கல்லூரணி சாலைகளை மேற்படி மாநில தரக்கட்டுப்பாடு அதிகாரி SV நாகப்பன் ஆய்வு செய்தார். அவருடன் (சாலைகள் மற்றும் பாலங்கள்) கோவில்பட்டி உதவி செயற்பொறியாளர் முத்துமாரி, புதூர் ஊராட்சி ஒன்றிய பொறியாளர்கள் தமிழ்ச்செல்வன், பீர் முஹம்மது, ஒப்பந்ததாரர் இராதாகிருஷ்ணன் உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.