விளாத்திகுளம் அருகே உள்ள பூதலாபுரம் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் பூட்டிக்கிடப்பதை கண்டு இன்று விநாயகர் சதுர்த்திக்கு விடுமுறை என நினைத்து கிராமப்புற நோயாளிகள் திரும்பிச் சென்ற அவலம்! தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள பூதலாபுரம் கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு பூதலாபுரம், மாவிலோடை, கந்தசாமிபுரம், மாதலாபுரம், L.V. புரம், நத்துப்பட்டி, வெங்கடாசலபுரம், தவசிலிங்கபுரம், நடுக்காட்டூர் உள்ளிட்ட பல கிராமங்களை சேர்ந்த   மக்கள் சிகிச்சைக்காக வந்து செல்லும் மையமாக பூதலாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைந்துள்ளது. இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர் பகுதி நேர சுகாதார செவிலியர்கள் இரண்டு பேர்,  என்.சி.டி. செவிலியர் உள்ளிட்டோர்  பணியில் இருப்பதாக தகவல் பலகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.