விளாத்திகுளம் அருகே வைப்பார் கிராமத்தில் சந்தனக்கூடு திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வைப்பார் கிராமத்தில் அமைந்துள்ள செய்யது சம்சுதீன் ஷஹீது ஒலியுல்லா தர்காவில்  சந்தனக்கூடு திருவிழாவிற்கான கொடியேற்றம் கடந்த 16- 9-2023 அன்று சிறப்பாக நடைபெற்றது, இந்நிலையில் நேற்று நள்ளிரவு  இரவு வைப்பார் சிவன் கோவிலில் இருந்து சந்தனம் அரைத்து, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஜாதி, மத பேதமின்றி சிலம்பம் சுத்தியவாறு   ஊர்வலமாக சென்று வானவேடிக்கையுடன் ஊர்வலமாக காலை 5:30 மணியளவில்  தர்காவை வந்தடைந்தனர்.இதில் வைப்பார் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த அனைத்து மதத்தினரும் கலந்துகொண்டு  பள்ளிவாசலில் வழிபட்டு சென்றனர்.