தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே வைப்பார் கிராமத்தில் அமைந்துள்ள பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த "மகான் செய்யது சமுசுதீன் ஷஹீது வலியுல்லா" தர்ஹா மற்றும் பள்ளிவாசலில் ஏராளமான இஸ்லாமியர்கள் முன்னிலையில் "சந்தனக்கூடு" திருவிழாவிற்கான கொடியேற்றம் 16.09.2023 அன்று  மாலை 5 மணி அளவில் ராஜ மேலத்துடன் வெண்கொடி ஏந்தி வைப்பார் கிராமம் முழுவதும் நகர்வலம் சென்று பின்னர் தர்காவை வந்தடைந்த கொடியை கொடி மரத்தில் ஏற்றப்பட்டு வெகு விமர்சையாக "சந்தனக்கூடு கொடியேற்றம் நிகழ்ச்சி" நடைபெற்றது. மேலும் வருகின்ற 29.09.2023 வெள்ளிக்கிழமையன்று பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்ளும் சந்தனகூடு திருவிழா வெகு விமர்சையாக நடைபெறவுள்ளது. இதனையடுத்து திருவிழாவின் இறுதியாக வருகின்ற 05.10.2023 வியாழக்கிழமை கொடி இறக்கம் நிகழ்வுடன் சந்தனக்கூடு திருவிழா முடிவடைகிறது.