விளாத்திகுளம் அருகே 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பெரியப்பா கைது!


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள அருங்குளம் கிராமத்தை சேர்ந்த கருப்பசாமி என்பவரின் மகன் கணேசன் (42), இவர் எந்த வேலைக்கு செல்லாமல் ஊருக்குள் ஊதாரியாக சுற்றி வந்ததாக கூறப்படுகிறதுஇந்நிலையில் வீட்டின் அருகே உள்ள தனது மகள் உறவுமுறை கொண்ட9 வயது சிறுமிக்கு தொடர்ந்து பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளார்இதனை அந்த சிறுமியின் தாய் பலமுறை கணேசனை கண்டித்துள்ளார், இந்நிலையில் 07-07-2024 ஞாயிற்றுக்கிழமை வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த அந்த 9 வயது சிறுமிக்கு பாலியல் ரீதியாக சைகை காட்டி துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார், இதனை அறிந்த அந்த சிறுமியின் தாய் கணேசன் மீது விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், கணேசனை (POSCO)சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில்அடைத்தனர்.9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த பெரியப்பா முறை கொண்ட நபர் கைதானது அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.