விளாத்திகுளத்தில் பெயிண்டர் தூக்கிட்டு தற்கொலை.தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வேம்பார் சாலை பகுதியை சேர்ந்த கருப்பசாமி என்பவரின் மகன் பாலமுருகன் (30), பாலமுருகன் பெயிண்டர் வேலை செய்து வந்துள்ளார். கடந்த ஓராண்டுக்கு முன்பு வாகன விபத்தில் காயம் ஏற்பட்டு ஆராத நிலையில் மிகுந்த வேதனையுடன் பாலமுருகன்  இருந்து வந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பாலமுருகன்  மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை எடுத்து உடலை கைப்பற்றிய விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார், பாலமுருகனின் உடலை கைப்பற்றி, உடற்கூறாய்வுக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.