தேமுதிமுக தலைவரும், நடிகருமான கேப்டன் விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக நேற்றையதினம் உயிரிழந்த சம்பவம் கட்சியினர் மற்றும் தமிழக மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் சென்னையில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு மத்திய, மாநில அமைச்சர்கள், மூத்த கட்சி தலைவர்கள், நடிகர்கள், திரைத்துறையினர், தேமுதிக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என லட்சக்கணக்கானோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வரும் நிலையில் தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் கேப்டன் விஜயகாந்த்தின் மறைவையொட்டி கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கள் ஒட்டப்பட்டு, பேனர்கள் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்ட வருகின்றது. இதேபோன்று தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சிங்கலிபட்டி கிராமத்தைச் சேர்ந்த கட்சியினர் சிலர் மொட்டை அடித்துக்கொண்டு கட்சியின் கொடி கம்பம் முன்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்தின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்கள் தூவியபடி... கதறி அழுது தங்களது சோகத்தை வெளிப்படுத்தினர்.. மேலும், கிராம மக்களும் கட்சியினருடன் சேர்ந்து கண்ணீர் மல்க கேப்டன் விஜயகாந்த் திருவுருப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.