தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியில், JSW தனியார் நிறுவனம் மற்றும் இந்தியா விஷன் இன்ஸ்டியூட் தொண்டு நிறுவனம் இணைந்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் நடத்தினர். இதில் இப்பள்ளியில் பயிலும் 6-வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டு குறைபாடுகள் கண்டறியப்பட்டது. மேலும் விளாத்திகுளம் மற்றும் எட்டையபுரம் பகுதியில் உள்ள 30க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளில் கண் பரிசோதனை நடத்தி அதில் 3000 மாணவ மாணவிகளுக்கு பரிசோதனை செய்ததில், 100 மாணவ-மாணவிகளுக்கு குறைபாடு கண்டறியப்பட்டு இலவசமாக கண் கண்ணாடி வழங்கப்பட்டது. அதிலும் 200 மாணவ மாணவிகளை விரிவான கண் பரிசோதனை செய்வதற்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரை செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.