விளாத்திகுளம் அருகே வாகன விபத்தில் மூதாட்டி பலிமதுரை சாந்தி நகர் 3வது தெரு பகுதியைச் சேர்ந்த பவுன்ராஜ் மகன் விஜயகுமார் வயது (47) மருந்து மொத்த வியாபாரம் செய்து வருகிறார் இவரும் இவரது மனைவி கவிதா (43)தாயார் பூங்கோதை (70)ஆகிய மூவரும் இன்று அதிகாலை மதுரையில் இருந்து தனது காரில் புறப்பட்டு தூத்துக்குடியில் உள்ள உறவினர் நிகழ்ச்சிக்கு வந்து கொண்டிருந்தனர், காரை விஜயகுமார் ஓட்டி வந்தார், இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சிந்தலக்கரை அருகே கார் வந்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக தேசிய நெடுஞ்சாலை பாலத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது,தகவல்அறிந்தவுடன் எட்டயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர் ,விஜயகுமாரின் தாய் பூங்கோதை (70)சம்பவ இடத்திலேயே பலியானார் படுகாயம் அடைந்த விஜயகுமார் அவரது மனைவி கவிதா ஆகிய இருவரும் எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து எட்டயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.