உங்கள் ஊரில் உங்களை தேடி மக்களுடன் முதல்வர் மற்றும் மக்களின் முகவரி போன்ற அரசின் திட்ட பணியில் அதீத பணியில் அளிக்கப்படுவதை தவிர்த்து திட்ட பணிகளை செம்மையாக மேற்கொள்ள உரிய கால அவகாசம் மற்றும் நிதி ஒதுக்கிடு ஆகியவற்றை உடனடியாக வழங்கிட வேண்டும்‌. -உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி,தமிழக முழுவதும் வருவாய் துறையினர் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களில் வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் பணிகளை புறக்கணித்து இரண்டாம் கட்ட தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம்   வட்டாச்சியர் அலுவலகத்தில் 22-2-2024 வியாழக்கிழமை காலை 11 மணியளவில் எட்டயபுரம் வட்டாட்சியர் அலுவலக அதிகாரிகள் அனைத்து பணிகளையும் புறக்கணித்து இரண்டாம் கட்டமாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.