தமிழ்நாட்டிற்கு எத்தனை மோடிகள் வந்தாலும் சரி என்னென்ன வேஷங்கள் போட்டாலும் சரி புதிய கட்சி பாவனைகள் செய்தாலும் சரி மொழி போர் தியாகிகள் இரத்தத்தால் சிவந்த இந்த மண்ணை நாம் காப்போம்!
வரலாறு இல்லாமல் கட்சி தொடங்கியவர்கள் எல்லாம் இன்று திமுகவை விமர்சிக்கின்றனர்* -எட்டயபுரத்தில் நடைபெற்ற மொழி போர் தியாகிகள் வீர வணக்க நாள் பொதுக்கூட்ட நிகழ்வில் பேசிய *அமைச்சர் கீதா ஜீவன் விஜய் மீது விமர்சனம்!
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக மாணவர் அணி சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் எட்டையபுரம் பட்டத்து விநாயகர் கோவில் முன்பு நடைபெற்றது.
ரசிறப்பு அழைப்பாளராக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் சிறப்புரை ஆற்றினார்.
முன்னதாக மொழி போர் தியாகிகளின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இப் பொதுக்கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில்...
சுதந்தர உணர்வை ஊட்டிய பாரதி மண்ணில் அன்னை தமிழ் மொழியை காப்பதற்காக உயிரை நீத்த தியாகிகள் நினைவாக நடைபெறும் பொதுக்கூட்டம்,
தாய் மொழி காப்பதற்காக நடைபெற்ற போர் என்றால் மொழி போர் தான்
தாய் மொழி தான் வேண்டும்
இந்தி வேண்டாம் என்று என்பதற்கக பெறும் போராட்டம் நடத்தியவர்கள் நம் மொழி போர் தியாகிகள்,
ஆனால் தற்போதும் இந்தியை திணிக்கிறது,
பாஜக அரசு இன்னும் அதை கைவிடவில்லை,
புதிய கல்வி கொள்கையில் இந்தியும் சமஸ்கிருதம் கட்டாயம் என்கிறார்கள்,பிகார், ராஜஸ்தான், ஹரியான,சத்திஸ்கர், போன்ற மாநிலங்களில் எல்லாம் தாய் மொழி மறைந்து போய்விட்டன
அதை போல தான் தமிழகத்தில் ஹந்திதை கொண்டு வந்து திணிக்க முற்படுகிறார்கள்,தமிழர் நாகரிகம் மிகவும் தொண்மை வாய்ந்தவை அதற்கு எடுத்துக்காட்டாக கிழடி,சிவகளை ஆய்வு அறிக்கை உள்ளது 3200 ஆண்டுக்கு முன்னரே நாகரிம் காலத்தில் வாழ்ந்து இருக்கிறேன் தமிழன் அதை ஆய்வு அறிக்கைக்கு அனுப்பினால் அதை ஒன்றிய மோடி அரசு ஏற்கவில்லை,
மேடைக்கு மேடைக்கு திருக்குறனை படித்து திருக்குறளை மோடி கொலை செய்கிறார்,சமஸ்கிருதத்திற்கு 2500 ஒதுக்கீடுத,மிழுக்கு வெறும் 11 கோடி வளர்ச்சிக நிதி ஒதுக்கீடு செய்து உள்ளார்கள் நம் தலைவர் தேர்தலில் சொன்ன வாக்குறுதியில் 402 வாக்குறுதியை நிறைவேற்றி உள்ளார்.
வரலாறு இல்லாமல் கட்சி தொடங்கியவர்கள் எல்லாம் இன்று திமுகவை விமர்சிக்கின்றனர் விஜய் குறித்து கடும் விமர்சனம், எத்தனை மோடிகள் வந்தாலும் சரி என்னென்ன வேஷங்கள் போட்டாலும் சரி புதிய கட்சி பாவனைகள் செய்தாலும் சரி மொழி போர் தியாகிகள் இரத்தத்தால் சிவந்த இந்த மண்ணை நாம் காப்போம்.
2026 ம் ஆண்டு தேர்தலில் நாம் விழிப்புணர்வு டன் செயல்பட வேண்டும் நம்மை பற்றி வதந்தி பார்ப்பவர்களுக்கு திராவிட மாடல் ஆட்சியை மீண்டும் அமைப்போம் என்று சபதம் ஏற்போம் என்று பேசினார்.