எட்டையாபுரம் பேரூராட்சி  3வது வார்டில்  ரூபாய் 79 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார் சாலை அமைக்கும் பணியினை எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் தொடங்கி வைத்தார்.தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள எட்டையாபுரம் பேரூராட்சிக்குட்பட்ட 3வது வார்டில் கலைஞர் நகர் புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 79 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார் சாலை அமைக்கும் பணியினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் அடிக்கல் நாட்டின் துவக்கி வைத்தார்.இந்நிகழ்வில் கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீதகண்ணன், எட்டையாபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி சங்கரநாராயணன், விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் மற்றும் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்.