விளாத்திகுளம் அருகே உள்ள கலைஞானபுரம் கிராமத்தில் ரூபாய் 6 லட்சத்தி 50,000 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய கலையரங்கம் கட்டுமான பணியை ஒன்றிய குழு பெருந்தலைவர் முனிய சக்தி ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கலைஞானபுரம் கிராமத்தில்,விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய 15-வது நிதி குழுவில் இருந்து ரூபாய் 6 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில்புதிய கலையரங்கம் கட்டுமான பணியை விளாத்திகுளம் ஒன்றிய குழு பெருந்தலைவர் முனியசக்தி ராமச்சந்திரன் பூமி பூஜை செய்து அடிக்கல்  தொடங்கி வைத்தார், இந்நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசன் மற்றும் கிராம பொதுமக்கள் என ஏராளமான ஊர் கலந்து கொண்டனர்.