வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி அன்று தமிழக மற்றும் புதுச்சேரியில்  ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது, இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைத்தலின்படி தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ள ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி அரசு ஊழியர்களுக்கு EVM மாதிரி வாக்குப்பதிவு பயிற்சி நடைபெற உள்ளது. இதன் முதற்கட்டமாக தூத்துக்குடி விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குமாராகிரி தனியார் பள்ளியில் மாவட்ட உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் உஷா மற்றும் மாவட்ட தேர்தல் துணை கண்காணிப்பாளர் ஐஸ்வர்யா தலைமையில், எட்டையாபுரம் மற்றும் விளாத்திகுளம் தாலுகாவிற்கு உட்பட்ட அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு EVM மாதிரி வாக்குப்பதிவு பயிற்சி மற்றும் வாக்குச்சாவடி மையத்தில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் உள்ளிட்ட பயிற்சி வழங்கப்பட்டது, இந்த பயிற்சியில் அரசு பள்ளி ஆசிரியர்கள் 1278 பேர் மற்றும் அரசு ஊழியர்கள் 250 கலந்து கொண்டனர். இந்தப் பயிற்சியில், தேடுதல் வட்டாட்சியர்கள் ராமகிருஷ்ணன், ராமகிருஷ்ணன், தபால் வாக்கு தேர்தல் வட்டாட்சியர் விமலா, தேர்தல் துணை வட்டாட்சியர் பாலமுருகன்,தேர்தல் சிறப்பு துணை வட்டாட்சியர் மணிகண்டன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்...