தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கே.சுப்பையாபுரம் சாலைத் துண்டிக்கப்பட்டது. இதனை அறிந்த விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் ஆய்வு செய்து, துண்டிக்கப்பட்ட சாலையை சீரமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து  கே.சுப்பையாபுரம் கிராமத்திலிருந்து சின்னூர் கிராமம் வரை அமைக்கப்படும் புதிய சாலை பணியை பார்வையிட்டார். இந்நிகழ்வில் திமுக புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், மும்மூர்த்தி, ஊராட்சி மன்ற தலைவர் சீதாலட்சுமி, விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் மற்றும் அரசு அதிகாரிகள் திமுக கட்சி நிர்வாகிகள் என ஏராளமான உடன் இருந்தனர்.