தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக முழுவதும் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் தொகுப்பு மற்றும் 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேரூராட்சிக்குட்பட்ட கடை எண் 2 மற்றும் 3-ல் பொங்கல் தொகுப்பு மற்றும் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை குடும்ப அட்டைதாரர்களுக்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் பொதுமக்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் கோவில்பட்டி கோட்டாட்சியர் ஜெயின் கிறிஸ்டிபாய், கோவில்பட்டி சரக்க துணை பதிவாளர் ராமகிருஷ்ணன், விளாத்திகுளம் வட்டாட்சியர் ராமகிருஷ்ணன், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் என ஏராளமான உடன் இருந்தனர்.