தூத்துக்குடியில் பெய்த தொடர் மழையின் காரணமாக விளாத்திகுளம் அருகே உள்ள வேப்பலோடை ஊராட்சிக்கு உட்பட்ட வடக்கு கல்மேடு கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டனர். இதனை அடுத்து பாதிக்கப்பட்ட வடக்கு கல்மேடு கிராம மக்களுக்கு  மக்களுக்கு, விளாத்திகுளம் அருகே உள்ள மாசார்பட்டி கிராம பொதுமக்கள் சார்பாகவும் ஊராட்சி சார்பாகவும் நிவாரண பொருட்கள் சேகரிக்கப்பட்ட வாகனத்தை  விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் மாசார்பட்டி கிராமத்திலிருந்து   அனுப்பி வைத்தார். இந்நிகழ்வில் மசார்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் கவிதா அய்யாதுரை, திமுக ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி, இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல், விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் மற்றும் கிராம பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.