தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேரூராட்சிக்குட்பட்ட 5வது வார்டு கத்தாளம்பட்டியில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு தொடர் கனமழையினால் அய்யம்மாள் என்பவரின் வீடு இடிந்து சேதம் அடைந்தது, இதனை அடுத்து தகவல் அறிந்த விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் இடிந்த அய்யம்மாளின் வீட்டை நேரில் சென்று ஆய்வு செய்து, தனது சொந்த நிதியிலிருந்து ரூபாய் 5000 வழங்கினார், மேலும் அரசின் சார்பில் நிதி கிடைக்க  ஏற்பாடு செய்யப்படும் என்று அய்யம்மாள் குடும்பத்திற்கு உறுதியளித்தார், இந்நிகழ்வில் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரி முத்து, தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல், விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உட்பட கிராம பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.