விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு அண்ணல் அம்பேத்கரின் நினைவு நாளை முன்னிட்டு எம்எல்ஏ மார்க்கண்டேயன் மலர் தூவி மரியாதை!சட்டமாமேதை அண்ணல் அம்பேத்கரின்  அவர்களின் 67வது நினைவு தினம் இந்தியா முழுவதும் பல்வேறு தரப்பினரால் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக  தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அண்ணல் அம்பேத்கரின் தெரு உருவப்படத்திற்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் மலர் தூவி மரியாதை செலுத்தினார், இந்நிகழ்வில்  விடுதலை சிறுத்தை கட்சியின் இளஞ்சிறுத்தை பாசறை ஆட்சி சடையாண்டி, ஒன்றிய பொருளாளர் வில்லான் ரெஸ்லி, திமுக மற்றும் விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள் தொண்டர் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து விடுதலை சிறுத்தை கட்சியினர் அண்ணல் அம்பேத்காரருக்கு வீரவணக்கம் செலுத்தினர்.