தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேரூராட்சிக்குட்பட்ட 1வது வார்டு அம்பாள் நகரில் ரூபாய் 9 லட்சம் மதிப்பீட்டில் புதிய கூடுதல் மின்மாற்றியை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். இந்நிகழ்வில் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் (பொறுப்பு) சுரதா, மற்றும் திமுக தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மகேந்திரன், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் திமுக கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள், அம்பாள் நகர் பகுதி பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.