தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சோழபுரத்தில் இருந்து புங்கவர்நத்தம் செல்லும் சாலையில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 2 கோடியே ₹ 60 லட்சம் மதிப்பீட்டில் புதிய உயர்மட்ட பாலம் கட்டும் கட்டுமான பணியினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன்  பூமி பூஜை செய்து  பணியை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் திமுக ஒன்றிய செயலாளர் நவநீத கண்ணன், சோழபுரம் ஊராட்சி மன்ற தலைவர் அந்தோணிச்சாமி, மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.