தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள மாசார்பட்டி கிராமத்தில் 5000 மரக்கன்றுகள் நடுவது தொடர்பாக  ஊரின்  கண்மாய்கரை   மற்றும் சாலைகளை ஆய்வு செய்து மரங்கள் நடுவதற்கான இடத்தினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டே என் தேர்வு செய்தார். பின்னர் மாசர்பட்டி ஊராட்சி சார்பாக வளர்க்கப்படும் மூலிகை தோட்டம்,மண்புழு உரம் ஆகியவற்றை பார்வையிட்டார். இந்நிகழ்வில் மாசார்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் கவிதா அய்யாதுரை, ஒன்றியச் செயலாளர்  மும்மூர்த்தி, செல்வராஜ் கட்சியை நிர்வாகிகள் தொண்டர்கள் கிராம பொதுமக்கள் என ஏராளமான ஒரு கலந்து கொண்டனர்.