விளாத்திகுளம் அருகே  பல்வேறு திட்ட பணிகளை எம்.எல்.ஏ மார்கண்டேயன் தொடங்கி வைத்தார்.


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே  சிவஞானபுரம் ஊராட்சியில் பாராளுமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.20-லட்சம் மதிப்பீட்டில் சமுதாய நலக்கூடம் கட்டுவதற்கும், மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ்  பேவர் பிளாக் சாலை ரூ. 14.44- லட்சம் மதிப்பீட்டிலும், அருந்ததியர் தெருவில் 5.32-லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலையும் தெற்கு தெருவில் 6.37- லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலையும்  அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.7.95-லட்சம் மதிப்பீட்டில் சுற்றுச்சுவர் அமைப்பதற்கும், சக்கம்மாள்புரம் ஊராட்சி பொம்மையாபுரம் கிராமத்தில் 8.34-லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைப்பதற்கும் சக்கம்மாள்புரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ரூ. 8.37-லட்சம் மதிப்பீட்டில் சுற்றுச்சுவர் அமைப்பதற்கும் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர்,சட்டமன்ற சட்டவிதிகள் ஆய்வு குழு தலைவர்,தலைமை செயற்குழு உறுப்பினர் மார்கண்டேயன் அடிக்கல் நாட்டினார்.

நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்கவேல்,சந்திரசேகர் விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன்,விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் ராஜா  உட்பட கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.