தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள  சுப்புலாபுரம் - காடல்குடி செல்லும் சாலையில் சாலை ஒருங்கிணைந்த உள்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.7-கோடி மதிப்பீட்டில் சாலை பணிகளை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன்  துவக்கி வைத்தார். நிகழ்வில் உதவி கோட்ட பொறியாளர் ராஜபாண்டி,இளநிலை பொறியாளர் சார்லஸ் பிரேம்குமார், புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து,ஊராட்சி மன்ற தலைவர் சீதாலட்சுமி,தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல்,விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.