தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வரத்தம்பட்டி ஊராட்சி காட்டுராமன்பட்டி கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூபாய் 12 லட்சம் மதிப்பீட்டில் புதிய கலையரங்கம் கட்டுவதற்கான கட்டுமான பணியினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் அடிக்கல் நாட்டி கட்டுமான பணியினை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜவகர், திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீதக் கண்ணன் மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள், கிராம பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.