தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள குளத்தூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூபாய் 23 லட்சத்து 57 ஆயிரம் மதிப்பீட்டில், புதிதாக கட்டப்பட்டுள்ள புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் திறந்து வைத்தார்,இந்நிகழ்வில் குளத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் மாலதி செல்வபாண்டியன், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மாரிச்செல்வி பாலமுருகன், வட்டார வளர்ச்சி அலுவலர் தங்கவேல் மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் கிராம பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து குளத்தூரில் ரூபாய் 54 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள கால்நடை மருத்துவ மனையை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் திறந்து வைத்தார்.