விளாத்திகுளம் அருகே பட்டித்தேவன்பட்டி  கிராமத்தில் புதிய கூட்டுறவு பால் உற்பத்தியாளர் கட்டிடத்தினை எம்எல்ஏ மார்க்கண்டேயன் திறந்து வைத்தார்.  தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள பட்டித்தேவன்பட்டி கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ்  ரூபாய் 20 லட்சத்தி 10000ஆயிரம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள கூட்டுறவு பால் உற்பத்தியாளர் கட்டிடத்தினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் ரிப்பன் வெட்டி  திறந்து வைத்தார். இந்நிகழ்வில், பால்வள சங்கத்தின் செயல் ஆட்சியர் மனோகர், ஒன்றிய செயலாளர்கள் ராதாகிருஷ்ணன், மும்மூர்த்தி, செல்வராஜ் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி திமுக சமூக வலைதள பொறுப்பாளர் ஸ்ரீதர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.