தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கீழ அருணாச்சலாபுரம் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ்  ரூபாய் 5, லட்சத்தி 50,000 ஆயிரம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள பயணியர் நிழற்குடையை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் மக்களின் பயன்பாட்டிற்காக ரிப்பன் வட்டி திறந்து வைத்து மரக்கன்றுகள் நட்டினார். இந்நிகழ்வில்  ஊராட்சி மன்ற தலைவர் மகாலட்சுமி கண்ணன், ஒன்றிய செயலாளர்கள் மும்மூர்த்தி, ராதாகிருஷ்ணன், செல்வராஜ் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சசிகுமார், வெங்கடாசலம் மற்றும் கிராம பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.