விளாத்திகுளம் அருகே வெம்பூர் கிராமத்தில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடத்தை எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் திறந்து வைத்தார்.தூத்துக்குடி மாவட்டம்  விளாத்திகுளம் அருகே உள்ள வெம்பூர் கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூபாய் 13 லட்சத்து 57 ஆயிரம் மதிப்பீட்டில்  புதிதாக கட்டப்பட்டுள்ள புதிய அங்கன்வாடிமையக் கட்டிடத்தை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பின்னர் அங்கன்வாடி மைய வளாகத்தில் உள்ள மரக்கன்றுகளை நட்டினார்,இந்நிகழ்வில்  ஊராட்சி மன்ற தலைவர்  ராஜேஸ்வரி பரமசிவன், ஒன்றிய செயலாளர்கள் ராதாகிருஷ்ணன், மும்மூர்த்தி, செல்வராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சசிகுமார், வெங்கடாசலம்  கிராம பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.