விளாத்திகுளம் அருகே கருப்பூர் கிராமத்தில் ரூ.1கோடியே 19 லட்சத்து 56 ஆயிரம் மதிப்பீட்டில் வகுப்பறைகள் கட்டும் பணியை எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் துவக்கி வைத்தார். தூத்துக்குடி மாவட்டம்  விளாத்திகுளம் அருகே உள்ள கருப்பூர் கிராம அரசு உயர்நிலைப் பள்ளியில்,நபார்டு திட்டத்தின் கீழ் ரூபாய் ஒரு கோடியே 19 லட்சத்து 57 ஆயிரம் மதிப்பீட்டில்,நான்கு கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் மற்றும் ஒரு அறிவியல் ஆய்வகம் கட்டடம் கட்டும் கட்டுமான  பணியினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் அடிக்கல் நாட்டில் பூமி பூஜை செய்து கட்டுமான பணியை தொடங்கி வைத்தார், இந்நிகழ்வில் கோவில்பட்டி கல்வி மாவட்ட அலுவலர் ஜெய்பிரகாஷ் பள்ளியின் தலைமை ஆசிரியர் சுரேஷ்குமார் புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி மற்றும்  கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.