தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள மேலக்கரந்தை கிராமத்தில்  ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை சார்பில் ரூபாய் 6 லட்சம் மதிப்பீட்டில் புதிய பயணியர் நிழற்குடை கட்டும் கட்டுமான பணியினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டி கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் மேலக்கரந்தை  ஊராட்சி மன்ற தலைவர் முத்து முனியம்மாள், திமுக ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி, ராதாகிருஷ்ணன் மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.