தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சிவஞானபுரம் கிராமத்தில்  சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் புதிய நூலகம் கட்டும் கட்டுமான பணியினை எம்எல்ஏ மார்க்கண்டயேன் பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டில் கட்டுமான பணியை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் திமுக நிர்வாகிகள் தொண்டர்கள், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் மற்றும் கிராம பொதுமக்கள் என ஏராளமான இருந்தனர்.